சக்தியின் உருவமே, பார்வதியின் வடிவமே
திரிபுர சுந்தரி தேவியே, ஓ பிரபஞ்ச மாதாவே
அறிவு மற்றும் மேன்மையின் சொரூபமே
அமைதி மற்றும் அழகின் உயர்ந்த தெய்வமே
எங்கள் ஆசைகள் அனைத்தையும் உனது கண் பார்வையால் நிறைவேற்றுவாயாக:
பந்தாசுரனைக் கொன்றவளே, திரிபுர சுந்தரியே, ராஜ ராஜேஸ்வரியே
விஸ்வரூப சக்தியின் அவதாரமே,
தாமரை மீது பத்மாசனத்தில் அமரந்தவளே
சிவப்பு புடவை போர்த்தப்பட்டவளே,
நெற்றியில் பிறைச் சந்திரன் கொண்டவளே
உனது கரும்பு வில்லைப் வைத்து, மலர் அம்புகளால் எங்களைக் ரக்ஷிபாயாக:
கா என்ற சரஸ்வதியை ஒரு கண்ணாக, மா என்ற லட்சுமியை மற்றொறு கண்ணாக உடையவளே
மேல் கைகளில் பாசா மற்றும் அங்குசாவும், கீழ் கைகளில் கரும்பும் மலரும் ஏந்தியவளே
மாங்காட்டில் காமாட்சியாக பிறந்து,
மணல் லிங்கத்தை மாமரத்தடியில் தியானம் செய்து,
ஏகாம்பரநாத சிவபெருமானையே மணந்தவளே
உனது கடும்தவத்தின் பலன்களை எங்களுக்குத் தருவாயாக:
தசரத மன்னனே புத்திர பாக்கியம் வேண்டி அம்மனுக்கு யாகம் செய்ய
துர்வாச முனிவருக்கு பேசவும், கேட்கவும் சக்தி பெற்ற
ஆதிசங்கரரே மாங்காட்டிலும் காஞ்சியிலும் ஸ்ரீ சக்கரத்தை நிறுவி வெப்பத்தை தணித்த
பார்வதியின் தொப்புள் விழுந்த இடத்தில் ஒரு சக்தி பீடம் அமைந்த
அதே காஞ்சிவரத்தில் காமகோடி பீடாதிபதிகளுக்கு வந்தனம்
மகாஸ்வாமிகளுக்கும் ஸ்வாமிகளுக்கும் அர்ப்பணம்
பெரியவாக்கும் இளைய பெரியவாக்கும் சமர்ப்பணம்
Pl pardon me for any errors in Tamizh – which may be due to both my ignorance and with Translation from English